இச்செயல் மீனவர்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே, இனிமேலும் தாமதிக்காமல் தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒன்றிய அரசு இலங்கை அரசுடன் பேசி நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்பொழுது கைது செய்யப்பட்ட ராமேஸ்வரத்தை சேர்ந்த 15 மீனவர்களையும் விடுவிக்க வேண்டும். மீனவர்கள் நலனில் அக்கறையோடு, ஒன்றிய அரசு வெளியுறவுத் துறையின் மூலம் தொடர் கண்காணிப்பில் ஈடுப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.