பிளஸ் 2 படித்தவர்களுக்கு ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை

இந்திய ராணுவ தொழில்நுட்ப பிரிவில் இலவச பயிற்சி பெற்று அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: 10+2 Technical Entry Scheme-2025. மொத்த காலியிடங்கள்: 90.

வயது வரம்பு: 16½ முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.2005க்கும் 01.07.2008க்கும் இடைப்பட்ட தேதியில் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500.

உடற்திறன் தகுதி: 15 நிமிடங்களில் 2.4 கி.மீ., தூரம் ஓடிக் கடக்க வேண்டும். புஷ்அப்கள்-20, சிட்அப்கள்-20, சின்அப்கள்-8 எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீட்டர் தூரம் ஏற வேண்டும். எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வானது ஸ்டேஜ்-1 மற்றும் ஸ்டேஜ்-2 என இரு கட்டங்களாக நடைபெறும். ஸ்டேஜ்-1 தேர்வில் உளவியல் மற்றும் குழு விவாதம் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஸ்டேஜ்-2ல் உடற்தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு நடைபெறும்.

உ.பி.,யில் அலகாபாத், மத்திய பிரதேசத்தில் போபால், கர்நாடகாவில் பெங்களூரு, பஞ்சாபில் கபூர்தலா ஆகிய மையங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும். எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வுக்கான Call letter ஐ பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளவும்.பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 5 வருட பயிற்சி வழங்கப்படும். இதில் அடிப்படை ராணுவ பயிற்சி ஒரு வருடமும், ராணுவ தொழில்நுட்ப பயிற்சி 3 வருடமும் வழங்கப்படும். ராணுவ அதிகாரிக்கான பயிற்சி ஒரு வருடம் வழங்கப்படும். 5 வருட பயிற்சிக்குப்பின் ராணுவத்தில் லெப்டினென்ட் ஆக பணியமர்த்தப்படுவர். பயிற்சி ஜனவரி 2025ல் ஆரம்பமாகும்.

www.joinindiaarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் போது கல்வி சான்றிதழ், வயது சான்று, ஜேஇஇ பிரதான தேர்வு- 2024 மதிப்பெண் சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், ஆன்லைன் பிரின்ட் அவுட் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.06.2024.

Related posts

பண்ருட்டி அருகே 2000 லிட்டர் மெத்தனால் பதுக்கல்: பெட்ரோல் பங்க்-கிற்கு சீல்; சிபிசிஐடி அதிரடி

டிஜிட்டல் பண பரிவர்த்தனை ஊக்குவித்தால் பரிசு

சென்னையில் மாநகரப் பேருந்து கண்ணாடி உடைப்பு