Saturday, July 6, 2024
Home » பிளஸ் 2 படித்தவர்களுக்கு ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை

பிளஸ் 2 படித்தவர்களுக்கு ராணுவ தொழில்நுட்ப பிரிவில் வேலை

by Porselvi

இந்திய ராணுவ தொழில்நுட்ப பிரிவில் இலவச பயிற்சி பெற்று அதிகாரியாக பணிபுரிய விரும்பும் திருமணமாகாத ஆண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பயிற்சி: 10+2 Technical Entry Scheme-2025. மொத்த காலியிடங்கள்: 90.

வயது வரம்பு: 16½ முதல் 19½ வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 02.07.2005க்கும் 01.07.2008க்கும் இடைப்பட்ட தேதியில் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் பாடங்கள் அடங்கிய பிரிவில் 60% மதிப்பெண்களுடன் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.56,100- ரூ.1,77,500.

உடற்திறன் தகுதி: 15 நிமிடங்களில் 2.4 கி.மீ., தூரம் ஓடிக் கடக்க வேண்டும். புஷ்அப்கள்-20, சிட்அப்கள்-20, சின்அப்கள்-8 எடுக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். செங்குத்தான கயிற்றில் 3.4 மீட்டர் தூரம் ஏற வேண்டும். எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வானது ஸ்டேஜ்-1 மற்றும் ஸ்டேஜ்-2 என இரு கட்டங்களாக நடைபெறும். ஸ்டேஜ்-1 தேர்வில் உளவியல் மற்றும் குழு விவாதம் நடைபெறும். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ஸ்டேஜ்-2ல் உடற்தகுதித் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு நடைபெறும்.

உ.பி.,யில் அலகாபாத், மத்திய பிரதேசத்தில் போபால், கர்நாடகாவில் பெங்களூரு, பஞ்சாபில் கபூர்தலா ஆகிய மையங்களில் நேர்முகத் தேர்வு நடைபெறும். எஸ்எஸ்பி நேர்முகத் தேர்வுக்கான Call letter ஐ பதிவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளவும்.பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு 5 வருட பயிற்சி வழங்கப்படும். இதில் அடிப்படை ராணுவ பயிற்சி ஒரு வருடமும், ராணுவ தொழில்நுட்ப பயிற்சி 3 வருடமும் வழங்கப்படும். ராணுவ அதிகாரிக்கான பயிற்சி ஒரு வருடம் வழங்கப்படும். 5 வருட பயிற்சிக்குப்பின் ராணுவத்தில் லெப்டினென்ட் ஆக பணியமர்த்தப்படுவர். பயிற்சி ஜனவரி 2025ல் ஆரம்பமாகும்.

www.joinindiaarmy.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் போது கல்வி சான்றிதழ், வயது சான்று, ஜேஇஇ பிரதான தேர்வு- 2024 மதிப்பெண் சான்று ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்கள், ஆன்லைன் பிரின்ட் அவுட் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13.06.2024.

You may also like

Leave a Comment

five × one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi