* பெரம்பூரிலும் மறியல்
பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆம்ஸ்ட்ராங் உடலை பெரம்பூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதைக்க வேண்டும் என வலியுறுத்தி, இரு பிரிவுகளாக பிரிந்து பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை, பெரம்பூர் முரசொலி மாறன் பூங்கா அருகே நேற்று மாலை சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த மறியலால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல செய்தனர்.
* ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த மாயாவதி இன்று சென்னை வருகை
பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் நேற்று முன் தினம் மாலை சென்னையில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே படுகொலை செய்யப்பட்டார். தலித் மக்களின் குரலாக இருந்த அவரது இறப்பு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெறாமல் இருக்க மாநில அரசு உடனடியாக கடுமையான மற்றும் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இன்று காலை சென்னைக்கு வந்து ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, பாதிக்கப்பட்ட அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூற இருக்கிறேன். தொண்டர்கள் அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் வைக்கிறேன்.