Friday, September 6, 2024
Home » ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பா?: பிரேமலதா கண்டனம்

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கு தொடர்பா?: பிரேமலதா கண்டனம்

by Arun Kumar

சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேமுதிகவுக்கும் சம்மந்தம் இருப்பதாக சொல்வதா என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா கண்டனம் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அனைத்து கட்சியினரையும் விசாரணை வலைக்குள் கொண்டு வரவேண்டும் என்ற நோக்கத்தோடு காவல்துறை செயல்படுகிறது என தகவல் வருகிறது.

தேமுதிகவை சேர்ந்த திருவள்ளூர் நகர செயலாளர் மணிகண்டனுக்கும் இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுவது முற்றிலும் தவறான செய்தி. விசாரணை என்ற பெயரில் அழைத்துப் பேசியுள்ளனர். விசாரணையில் எதுவும் நிரூபிக்கப்படாததால் அவரை இந்த வழக்கில் உட்படுத்தாமல் அனுப்பிவிட்டனர். இதுதான் நேற்று நடந்திருக்கிறது. அதற்குள் தேமுதிகவிற்கும் தொடர்பு இருக்கிறது என்ற முற்றிலும் உண்மைக்கு புறம்பான தகவல் அளித்த எந்த தொலைக்காட்சியாக இருந்தாலும் இது கண்டிக்கதக்கது.

 

You may also like

Leave a Comment

four × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi