அதன் அடிப்படையில் ஹரிஹரனை 5 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும், பொன்னை பாலு, ராமு, அருள் ஆகியோரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. ஏற்கனவே கைதானவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் பிரபல ரவுடிகள் சம்பவ செந்தில் மற்றும் சீசிங் ராஜா ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களை பிடிக்க ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். சம்பவ செந்திலை உத்தரபிரதேச மாநிலத்தில் வைத்து போலீசார் சுற்றி வளைத்துள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
* புதிய தலைவர் எழுப்பிய சந்தேகம்
புதிய மாநில தலைவர் ஆனந்தன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஆற்காடு சுரேஷ் கொலைக்கும் ஆம்ஸ்ட்ராங்கிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. சனிக்கிழமை கவர்னரை சந்திக்க திட்டமிட்டுள்ளோம். வழக்கு விசாரணை எவ்வாறு செல்கிறது என்பதை பார்த்து எங்களின் அடுத்த கட்ட நகர்வுகள் இருக்கும் என தெரிவித்தார்.
* ஆம்ஸ்ட்ராங் மனைவிக்கு பதவி
பெரம்பூரில் மத்திய ஒருங்கிணைப்பாளர் அசோக் சித்தார்த் மற்றும் கோபிநாத் ஆகியோர் தலைமையில் பகுஜன் சமாஜ் கட்சி அலுவலகத்தில் செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஒருமனதாக வழக்கறிஞர் ஆனந்தன் என்பவர் அக்கட்சியின் தமிழக தலைவராக தேர்வு செய்யப்பட்டார். மாநில ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங்கின் மனைவியான பொற்கொடி ஆம்ஸ்ட்ராங், மாநில துணைத்தலைவராக இளமான் சேகர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.