சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 11 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் செம்பியம் போலீஸ் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ம் தேதி பெரம்பூரில் கொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பொன்னை பாலு, சந்தோஷ், மணிவண்ணன், திருவேங்கடம் உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.