மேலும் இந்த கொலையில் சம்பவ செந்திலுடன் தொடர்பிலிருந்து பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்ட ஹரிஹரன் என்பவரை ஐந்து நாள் போலீஸ் காவலில் எடுத்து தனிப்படை போலீசார் விசாரணை செய்து வந்தனர். இதனிடையே, நேற்று விசாரணை முடிவடைந்த நிலையில் எழும்பூர் ஐந்தாவது நீதிமன்ற நீதிபதியிடம் ஆஜர்படுத்தி மீண்டும் அவரை பூந்தமல்லி தனி சிறையில் அடைத்தனர். அவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டதன் அடிப்படையில் சில வழக்கறிஞர்களின் வங்கி கணக்கு மற்றும் செல்போன் உரையாடல்களை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.