இந்நிலையில் வேலூர் மத்திய சிறையில் இருந்த ரவுடி நாகேந்திரனை, கடந்த 14ம் தேதி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 7 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் நாகேந்திரனை 3 நாள் காவலில் விசாரிக்க நீதிபதி அனுமதி வழங்கினார்.
அதன்படி கடந்த 3 நாட்களாக ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக ரவுடி நாகேந்திரனிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணை முடிவடைந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு வேலூர் மத்திய சிறையில் ரவுடி நாகேந்திரன் மீண்டும் அடைக்கப்பட்டார்.