சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி சீசிங் ராஜாவை போலீஸ்என்கவுன்ட்டர் செய்தது. சென்னைக்கு அழைத்து வந்தபோது காவல் துறையினரை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றதாக கூறப்படுகிறது. சீசிங் ராஜா ஐந்து முறை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர். ஆற்காடு சுரேஷின் நெருங்கிய நண்பரான சீசிங் ராஜா மீது 5 கொலை வழக்கு உட்பட 32 வழக்குகள் உள்ளன