பொன்னேரி : ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ரூ. 150 கோடி நிலம் பொன்னேரி அருகே ஒரக்காட்டில் மீட்கப்பட்டது. நிலத்தகராறில் ஆம்ஸ்ட்ராங் மற்றும் நாகேந்திரன் இடையே ஏற்பட்ட மோதலால் கொலை நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கொலைக்கு காரணமான 150 கோடி ரூபாய் ஆக்கிரமிப்பு நிலத்தை அரசு அதிகாரிகள் மீட்டுள்ளனர்.