ஆம்ஸ்ட்ராங் மரணம் பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பு: கமல்ஹாசன் இரங்கல்

சென்னை: பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது என மநீம கட்சி தலைவர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினர், நண்பர்கள், கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பு. ஒரு தேசியக் கட்சியின் மாநில தலைவர், மக்கள் நடமாட்டம் மிகுந்த
பகுதியில் கொல்லப்பட்டிருப்பது கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார்.

 

Related posts

மெரினாவில் நாளை விமான சாகச நிகழ்ச்சி: போக்குவரத்து மாற்றம்

அதானி குழுமம் தொடர்பான பங்குச்சந்தை முறைகேடு: செபி தலைவர் மாதவி ஆஜராக சம்மன்

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் சகோதரிகள் கைது