சென்னை: ஆம்ஸ்ட்ராங் வழக்கில் குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என்று சென்னையில் ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். வழக்கில் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டு, கொடுங் குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர் என முதல்வர் கூறினார். பெரம்பூரில் கொல்லப்பட்ட பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.