மோடி தலைமையிலான அரசு, ஒவ்வொரு களத்திலும் நாட்டை தன்னிறைவு பெறுவதற்கான தொலைநோக்கு பார்வையுடன் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது. கடந்த சில ஆண்டுகளில், உள்நாட்டு பாதுகாப்புத் துறையை மேம்படுத்துவதற்கு அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 2023-24ல் முதல் முறையாக ரூ. 21,000 கோடியைத் தாண்டியது. மேலும் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அதை ரூ..50,000 கோடியாக உயர்த்த பாதுகாப்பு அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.