ஜெயங்கொண்டம்: அரியலூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் தொழிலாளி பலியானார். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள பெரியவளையம் கிராமம் மேலத் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (48). கூலித் தொழிலாளி. இவர் நேற்று திருச்சி – சிதம்பரம் பைபாஸ் சாலையில் பெரியவளையம் கிராமத்திற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் பாலகிருஷ்ணன் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில் தூக்கி வீசப்பட்ட பாலகிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த ஜெயங்கொண்டம் போலீசார் உடலை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை தேடி வருகின்றனர், இறந்த பாலகிருஷ்ணனுக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.