அரிமளம் சுந்தர சுவாமி கோயில் 145ம் ஆண்டு மகா குருபூஜை விழா

 

திருமயம், நவ. 9: அரிமளத்தில் சுந்தர சுவாமி கோயில் 145 ம் ஆண்டு மகா குருபூஜை விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் மகான் கோடகநல்லூர் சுந்தர சுவாமிகள் கோயில் உள்ளது. இக்கோயில் அப்பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இதனிடையே சுந்தர சுவாமிகள் 145ம் ஆண்டு மகா குருபூஜை விழா நேற்று நடைபெற்றது. விழாவானது காலை 7 மணி அளவில் கோபூஜை, கலச பூஜை, காயத்ரி ஹோமத்துடன் தொடங்கியது.தொடர்ந்து ருத்ர ஜபம் நிகழ்ச்சியுடன் சிறப்பு அபிஷேக. ஆராதனை நிகழ்ச்சியும் நாராயண ஞான தேசிக சுவாமிகள் அருளுரை, ஆன்மீக சொற்பொழிவும் நடைபெற்றது. பின்னர் மதியம் தீபாரதனை, தீர்த்த நாராயண பூஜையை தொடர்ந்து மாலை சுவாமிகள் திருவீதி உலா நடைபெற்றது.இதனிடையே காலை 8 மணி முதல் கோயில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சி, குருபூஜை விழாவில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை