சென்னை: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘அரியானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள, கட்சியினருக்கு எனது அன்பார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் திறன் மிகுந்த தலைமையின் கீழ் பாரத தேசம் அடைந்துள்ள வளர்ச்சியும், கடந்த பத்து ஆண்டு காலமாக அரியானா மாநிலத்தின் வளர்ச்சியில் நமது கட்சி கொண்டிருந்த ஈடுபாடுமே, மக்கள் தொடர்ச்சியாக நமக்கு அளித்துள்ள வெற்றிக்கு சான்றாகியுள்ளது’ என்று கூறி உள்ளார்.