இந்நிலையில்,அனைத்து பள்ளிகளுக்கு, மாநில பள்ளிக்கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதில், தேச பற்று, நாட்டின் மீதான பெருமையை உணர்த்தும் வகையில், ஆக.15ம் தேதி முதல், பள்ளிகளில் காலையில் குட்மார்னிங்குக்கு பதில் ஜெய்ஹிந்த் என்று சொல்ல மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ஜெய்ஹிந்த் என்ற வார்த்தையை வழக்கமாக பயன்படுத்தும் போதும், மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை தூண்டும். நாட்டின் வரலாற்றை மதிப்பதற்கான பழக்கம் உருவாக்கும் என்று கூறப்பட்டுள்ளது.