அரியானா மாஜி எம்எல்ஏ வீட்டில் ரூ.5 கோடி பணம், தங்கம் பறிமுதல்

சண்டிகர்: அரியானா மாநிலம்,யமுனாநகர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக பாறைகளை வெட்டி எடுத்தல், மண் கடத்தல் ஆகியவை தொடர்பாக இந்திய தேசிய லோக்தள கட்சி முன்னாள் எம்எல்ஏ தில்பக் சிங், காங்கிரஸ் எம்எல்ஏ சுரேந்திர பன்வார் ஆகியோர் மீது சட்டவிரோத பண பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில், தில்பக் சிங், சுரேந்திரா பன்வார் ஆகியோர் வீடு, அவர்கள் தொடர்புடைய 20க்கும் மேற்பட்ட இடங்களில் நேற்றுமுன்தினம் அதிகாரிகள் சோதனை நடத்தினர். தில்பக் சிங்குக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 5 கோடி பணம், வெளிநாட்டு துப்பாக்கிகள், தோட்டாக்கள், 5 கிலோ தங்கக்கட்டிகள்,நகைகள், 100 மதுபான பாட்டில்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related posts

ஆகஸ்ட் 03: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

கோவையில் 4 பேர் கும்பல் வெறிச்செயல் மர்ம உறுப்பை துண்டித்து வக்கீல் கொடூர கொலை: பெண் விவகாரமா? போலீஸ் விசாரணை

பாதயாத்திரை கூட்டத்தில் லாரி புகுந்து 3 பக்தர்கள் பலி