இதில் சஞ்சயையும், முதியவர் கத்தியால் குத்தினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த கல்லூரி மாணவன் உட்பட 2 பேரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் சம்பவம் குறித்து கல்லூரி மாணவன் வரதன் பாபு மற்றும் சஞ்சய் ஆகியோர் கொடுத்த புகாரின் படி, போலீசார் முதியவர் கலைமணி மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.