திருவண்ணாமலை: ஆரணியில் மாமனார் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொலை செய்த மருமகன் மன்சூர் சிறையில் அடைக்கப்பட்டார். நேற்று ஆரணி டவுன், மணியம்மை தெருவை சேர்ந்த ஜமால்பாஷாவை (65) அவரது மருமகன் மன்சூர் கொலை செய்தார். குடும்பத் தகராறு காரணமாக மாமனாரை, மன்சூர் கொலை செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.