டெல்லி: அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள தேஜ் புயல் வடமேற்கு திசையில் வரும் 3 நாட்களுக்கு நகரும் என்று இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் 24ல் ‘தேஜ்’ மிகத் தீவிர புயலாக ஏமன் மற்றும் ஓமன் கடற்கரை பகுதியில் கடக்கக்கூடும். தேஜ் புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.