சென்னை : வங்கக்கடல் மற்றும் அரபிக் கடலில் ஒரே நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகி உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி,அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.