நீராகாரக் கஞ்சி

தேவையானவை:

பழைய சாதம் – சிறிதளவு,
மோர் – 1 கப்,
சின்ன வெங்காயம் – 4 அல்லது பெரிய வெங்காயம் -1, உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

பழைய சாதத்தை உப்பு போட்டு கரைத்துக்கொள்ளுங்கள். அதோடு மோர் சேர்த்து அருந்தினால், உடம்பைக் குளிரவைக்கும் அற்புதமான கஞ்சி இது. விருப்பமுள்ளவர்கள் வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி மேலே தூவிக் குடிக்கலாம். அம்மை நோய் கண்டவர்களுக்கு உகந்த கஞ்சி இது. மண் பாத்திரத்தில் பழைய சாதத்தை வைத்திருந்து அருந்தினால் இன்னும் குளிர்ச்சி. செலவேயில்லாத எளிய கஞ்சி. ஆனால், கிடைக்கும் பலனோ மிகவும் அதிகம்.

Related posts

கல்யாண வீட்டு முட்டைகோஸ் பொறியல்

பிரெட் போண்டா

லெமன் கேக்