பின்னர் புடின் கிரெம்ளின் மாளிகையில் நேற்று ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகளுடனான சந்திப்பில், கூலிப்படையினரால் ஏற்பட இருந்த உள்நாட்டு போரை ஆக்கப்பூர்வமாக விரைந்து தடுத்து நிறுத்திய ராணுவம் மற்றும் போலீசாருக்கு பாராட்டு தெரிவித்தார். இந்த கிளர்ச்சியை மக்களும் ராணுவமும் ஆதரிக்கவில்லை. கூலிப்படையை சேர்ந்த வீரர்கள் ராணுவத்தில் சேரலாம் இல்லையென்றால் படையை விட்டு விலகலாம் அல்லது பெலாரஸ் செல்லலாம் என்று கூறினார். இதற்கிடையே, கிளர்ச்சியில் ஈடுபட்ட கூலிப்படை தலைவர் பிரிகோஷின் மற்றும் அதில் பங்கேற்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை திரும்ப பெறுவதாக ரஷ்ய புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுத்து நிறுத்தியதால் கிளர்ச்சியில் ஈடுபட்ட அவர்கள் மீதான வழக்கை தொடரப் போவதில்லை என்று அது தெரிவித்துள்ளது.
* மர்மம் நீட்டிப்பு
வாக்னர் கூலிப்படையின் தலைவர் யெவ்கெனி பிரிகோஷின் பெலாரஸில் இருக்கலாம் என்று சந்தேகிப்பதாக கிரெம்ளின் மாளிகை தெரிவித்துள்ளது. அதே நேரத்தில், பெலாரஸில் செயல்படும் தனியார் ராணுவ அமைப்பான பெலாரஸ்கி ஹஜூன், பிரிகோஷின் வழக்கமாக பயன்படுத்தும் ஜெட் விமானம் மின்ஸ்க் அருகே நேற்று காலை தரையிறங்கியதாக தெரிவித்துள்ளது. ஆனால், பிரிகோஷின் அங்கு இருப்பதை அவரோ அல்லது பெலாரஸ் அரசோ உறுதிபடுத்தவில்லை.