அதன் தொடர்ச்சியாக 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளி களை பாராட்டி ஊக்குவிக்கவும், விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற மாணவ, மாணவியரை ஊக்கப்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு அரசு சார்பில் ஆகஸ்ட் 4ம் தேதி சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. விழாவுக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகிக்கிறார்.