செய்யூர்: செய்யூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு, பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நேற்று நடந்தது. செய்யூர் ஊராட்சி மன்ற தலைவராக அந்த பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016 வரை பணியாற்றினார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்த காலத்தில், செய்யூரில் தீயணைப்பு நிலையம் அமைத்தல், புதிய நூலக கட்டடம் அமைத்தல், செய்யூர் அரசு மருத்துவமனையை விரிவுபடுத்துதல், 7 புதிய குடிநீர் கிணறு அமைத்தல், அரசு மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தேர்ச்சி விகிதம் 50 சதவீதத்தையும் கீழ் சென்றதால் புதிய ஆசிரியர்களை நியமிக்க முயற்சி உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டார்.