மாஜி தலைவருக்கு பாராட்டு விழா

செய்யூர்: செய்யூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவருக்கு, பொதுமக்கள் சார்பில் பாராட்டு விழா நேற்று நடந்தது. செய்யூர் ஊராட்சி மன்ற தலைவராக அந்த பகுதியை சேர்ந்த இளங்கோவன் என்பவர் கடந்த 2011ம் ஆண்டு முதல் 2016 வரை பணியாற்றினார். இவர் ஊராட்சி மன்ற தலைவராக பதவி வகித்த காலத்தில், செய்யூரில் தீயணைப்பு நிலையம் அமைத்தல், புதிய நூலக கட்டடம் அமைத்தல், செய்யூர் அரசு மருத்துவமனையை விரிவுபடுத்துதல், 7 புதிய குடிநீர் கிணறு அமைத்தல், அரசு மேல்நிலை பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக தேர்ச்சி விகிதம் 50 சதவீதத்தையும் கீழ் சென்றதால் புதிய ஆசிரியர்களை நியமிக்க முயற்சி உள்ளிட்ட பணிகளை சிறப்பாக மேற்கொண்டார்.

Related posts

தனியார் மருத்துவமனை அறுவை சிகிச்சையில் பங்கேற்ற அரசு மருத்துவர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?: அரசு பதில்தர ஐகோர்ட் உத்தரவு

திமுக ஆட்சியில் எண்ணற்ற திட்டங்கள் விக்கிரவாண்டியில் திண்ணை பிரசாரம்: விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி அறிவிப்பு

வெளிநாடு செல்லும் அண்ணாமலை; தமிழக பாஜவை நிர்வகிக்க கமிட்டி அமைக்க திட்டம்: தேர்தலில் வேலை செய்யாதவர் பதவியை பறிக்க முடிவு