Sunday, July 7, 2024
Home » ஐக்கிய அரபு அமீரகத்தில் தச்சர், பிளம்பர், பிட்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் தச்சர், பிளம்பர், பிட்டர் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்: அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தகவல்

by Arun Kumar

சென்னை: ஐக்கிய அரபு அமீரகத்தில் தச்சர், பிளம்பர், பிட்டர் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக அலுவலர் வெளியிட்ட அறிக்கை: ஐக்கிய அரபு அமீரகத்தில் தச்சர், ஸ்டீல் பிட்டர், ஹெல்பர் , கட்டுமான பணியாளர், அலுமினியம் பேப்ரிகேட்டர், டக்ட் மேன், மரச்சாமான் சாயம் பூசுபவர், மரச்சாமான் தச்சர், பிளம்பர் மற்றும் ஏசி டெக்னீஷியன் ஆகிய பணிகளுக்கான தேவைப்பட்டியல் பெறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் பணிபுரிய குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 2 வருட பணி அனுபவத்துடன் 40 வயதிற்கு உட்பட்ட தச்சர், ஸ்டீல் பிட்டர், ஹெல்பர் ஆகிய பணிக்கு ரூ.27,600 ஊதியமாகவும் கட்டுமான பணியாளர், அலுமினியம் பேப்ரிகேட்டர், டக்ட் மேன் ஆகிய பணிக்கு ரூ.29,900ம், மரச்சாமான் சாயம் பூசுபவர், மரச்சாமான் தச்சர் ஆகிய பணிக்கு ரூ.31,050ம் மற்றும்பிளம்பர் மற்றும் ஏசி டெக்னீஷியன் ஆகிய பணிக்கு ரூ.34,500 ஊதியமாக வழங்கப்படும் விசா மற்றும் இருப்பிடம் வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் www.omcmanpower.tn.gov.in என்ற இந்நிறுவன இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், ovemclnm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவர விண்ணப்பப்படிவம், கல்வி, பணி அனுபவச் சான்றிதழ் மற்றும் பாஸ்போர்ட் நகலினை ஜூலை 10ம் தேதிக்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன தொலைபேசி எண்கள் 044-22505886/22502267 மற்றும் வாட்ஸ் ஆப் எண் 95662 39685 வாயிலாக அறிந்துகொள்ளலாம். அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் ஒரு அரசு நிறுவனம் என்பதால் இந்த நிறுவனத்தின் கீழ் எந்த ஒரு இடைத்தரகரோ அல்லது ஏஜண்டுகளோ எவரும் இல்லை. ஆகவே விருப்பம் உள்ளவர்கள் நேரடியாகவே இந்நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம். மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப்பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ. 35,400 மட்டும் செலுத்தினால் போதும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

You may also like

Leave a Comment

nineteen − five =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi