சிங்கப்பூர்: உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரை சென்னையில் நடத்துவதற்கு உலக செஸ் கூட்டமைப்பிடம் தமிழ்நாடு அரசு விண்ணப்பித்துள்ளது. டெல்லியில் நடத்த அகில இந்திய செஸ் கூட்டமைப்பும் சிங்கப்பூரில் நடத்த அந்நாட்டு அரசும் விண்ணப்பித்துள்ளன. விண்ணப்பங்களை பரிசீலித்து இம்மாத இறுதிக்குள் முடிவு தெரிவிக்கப்படும் என FIDE தகவல் தெரிவித்துள்ளது. நவம்பர் 20 முதல் டிசம்பர் 15 வரை உலக செஸ் சாம்பியன்ஷிப் நடைபெறவுள்ளது.