தமிழக அரசு இந்த ஆண்டு கூட்டுறவு துறைகளுக்காக பல அதிரடி திட்டங்களை அறிவித்திருந்த நிலையில், அத்துறையை டிஜிட்டல் மயமாக்க முதல்வர் உத்தரவிட்டதை தொடர்ந்து ‘கூட்டுறவு ஆப் ’ (Kooturavu App) எனும் செயலியை அறிமுகம் செய்துள்ளனர். கூட்டுறவு சங்கங்கள் வழங்கும் பல்வேறு சேவைகளை பொதுமக்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் அறிந்து கொள்ளும் வகையில், கூட்டுறவு சங்கங்களால் வழங்கப்படும் சேவைகள் தொகுக்கப்பட்டு, கூட்டுறவு என்ற பெயரில் புதிய செயலி உருவாக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இந்த செயலி மூலம் பல்வேறு தகவல்களை பெற முடிவதுடன், கடன்கள் குறித்ததகவல்கள், பெறும் வழிகள் என அனைத்தும் இந்தச் செயலியில் பெறலாம். மேலும் கடன் பெறுவதற்கான விண்ணப்பத்தையும் இணைய வழியே செயலியில் சமர்ப்பித்திடும் வகையில், இந்த செயலியில் விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.