மன்னிப்பு கடித பிரச்னை இபிஎஸ் உண்மைக் குணம் தொண்டர்களுக்கு புரிகிறது: ஓபிஎஸ் பேட்டி

மதுரை: மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்த்துக்கொள்வதாக கூறுவதில் இருந்து, எடப்பாடியின் உண்மையான குணம் தொண்டர்களுக்கு புரிந்துள்ளது என ஓபிஎஸ் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அளித்த பேட்டி: பொது சிவில் சட்டம் தொடர்பாக முதல்வர் கடிதம் எழுதி இருப்பது, அவருடைய கொள்கை முடிவு. பொது சிவில் சட்டம் நாட்டுக்கு தேவையா, இல்லையா என்பது குறித்து, சட்ட வல்லுனர் குழுவினரிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அது கிடைத்தவுடன் எங்கள் தரப்பு குறித்து விரிவான அறிக்கை தரப்படும். கொடநாட்டில் நடந்துள்ள கொலை, கொள்ளை என்பது பெரிய அளவிலானது. அதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பது எங்களுடைய தலையாய கோரிக்கை. இந்த வழக்கில் உண்மை வெளிவர வேண்டும் என்று மக்களும், அதிமுக தொண்டர்களும் விரும்புகிறார்கள். மன்னிப்பு கடிதம் கொடுத்தால் கட்சியில் சேர்த்துக் கொள்வோம் என்று இபிஎஸ், ஜெயக்குமார் கூறி வருவதில் இருந்து, அவர்களின் அடிமனதில் இருப்பதையும், உண்மையான குணத்தையும் கட்சி தொண்டர்களும், மக்களும் புரிந்து கொண்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி தீவிரம்

அதிகாரிகள் முறையாக கண்காணிப்பதில்லை 100 நாள் வேலை திட்டம் கொள்ளையடிக்கும் திட்டம்: நீதிபதிகள் காட்டம்

திருச்சியில் ரூ.315 கோடியில் டைடல் பூங்காவுக்கு டெண்டர்:18 மாதத்தில் கட்டி முடிக்க திட்டம், 5 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு