சென்னை: மைக்கேல் பட்டி பள்ளி மாணவி விவகாரத்தில் பாஜக மன்னிப்பு கேட்குமா? என விடுதலை ராசேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். கட்டாய மதமாற்ற நிர்பந்தத்தால் மாணவி தற்கொலை என்று கூறி தமிழ்நாட்டையே பாஜக போர்க்களம் ஆக்கியது. கட்டாய மதமாற்றம் செய்யப்படவில்லை என்று நீதிமன்றத்தில் சிபிஐ கூறிவிட்டது என அவர் கூறினார்.