அச்சிறுப்பாக்கம் விசிக சார்பில் போதை ஒழிப்பு மாநாடு துண்டறிக்கை விநியோகம்

மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் விசிக சார்பில், போதை ஒழிப்பு மாநாடு குறித்து துண்டறிக்கையை அக்கட்சியினர் அப்பகுதியில் விநியோகம் செய்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி மகளிரணி சார்பில், வரும் அக்டோபர் 2ம் தேதி கள்ளக்குறிச்சியில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தலைமையில் மது மற்றும் போதைபொருள் ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.

இம்மாநாடு குறித்து மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி விசிக சார்பில், நேற்று அச்சிறுப்பாக்கம் அருகே ரெட்டைமலை சீனிவாசன் மணிமண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் கலங்கரை காசி வரவேற்றார்.

இக்கூட்டத்தில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பேரறிவாளன், தொகுதி துணை செயலாளர் விடியல் வேலவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, விசிக சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு குறித்து துண்டறிக்கையை பெண்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினர்.இதில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கதிர்வாணன், முகிலன், தயாநிதி, கிட்டு பிரபாகரன், சமத்துவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கலெக்டர் அலுலகத்தில் மக்கள் குறைதீர்நாளில் 565 மனுக்கள்

சென்னை கீழ்கட்டளையில் உள்ள ஹோலி பேமிலி கான்வென்ட் மெட்ரிகுலேஷன் பள்ளியில் அதிரடியாக உயர்ந்த பருவக்கட்டணம்: பெற்றோர்கள் போராட்டம்

வழிப்பறி திருடர்களை கண்காணிக்க நாமக்கல் பஸ் நிலைய புறக்காவல் நிலையத்தில் கூடுதல் போலீசார்