இம்மாநாடு குறித்து மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி விசிக சார்பில், நேற்று அச்சிறுப்பாக்கம் அருகே ரெட்டைமலை சீனிவாசன் மணிமண்டபத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றிய செயலாளர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் கலங்கரை காசி வரவேற்றார்.
இக்கூட்டத்தில், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதி செயலாளர் பேரறிவாளன், தொகுதி துணை செயலாளர் விடியல் வேலவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று, விசிக சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு குறித்து துண்டறிக்கையை பெண்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளிடம் வழங்கினர்.இதில் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் கதிர்வாணன், முகிலன், தயாநிதி, கிட்டு பிரபாகரன், சமத்துவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.