அதிமுக தொகுதி பங்கீடு குழு அமைத்து பல நாட்கள் ஆகியும் இதுவரை எந்த கட்சிகளுடனும் அந்த குழு பேச்சு நடத்தவில்லை. அண்மையில் அதிமுக அலுவலகத்தில் தொகுதி பங்கீட்டு குழு ஆலோசனை நடந்தபோதும் வேறு எந்த கட்சியை சேர்ந்தவர்களும் வரவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஜி.கே.வாசன் சந்தித்தபோதும் கூட்டணி குறித்து பேசவில்லை. இதற்கு முன் தோழமையாக இருந்தாலும் இப்போது பாஜ எங்களுக்கு எதிரி. பாஜ எங்களுக்கு எதிரி என்ற கண்ணோட்டத்துடன்தான் அணுகுவோம். இவ்வாறு அவர் கூறினார்.