அனுமந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு பாராட்டு சான்றிதழ்: முதல்வர் வழங்கினார்

திருப்ேபாரூர்: திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய அனுமந்தபுரம் ஊராட்சியில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த கல்வியாண்டில் இந்த பள்ளியில் பயின்ற 10ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்று, பள்ளி 100 சதவீத தேர்ச்சி அடைந்தது. நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற பள்ளிக்கல்வித்துறை நிகழ்ச்சியில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுமந்தபுரம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பிரமிளாவுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி கவுரவித்தார். பாராட்டுச் சான்றிதழ் பெற்ற அவருக்கு அனுமந்தபுரம் உள்ளாட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், பெற்றோர்கள் பாராட்டு தெரிவித்தனர்.

Related posts

சிறப்பு புலனாய்வு குழுவினர் முன் ஹத்ராஸ் சம்பவத்தின் ஒருங்கிணைப்பாளர் சரண்: போலீஸ் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிக்கி 5 பத்திரிக்கையாளர்கள் உள்பட 29 பேர் பலி