இந்த பரபரப்பை பார்த்து அங்கிருந்த மீனவர் சங்க கணக்கர் ஒருவர் மயங்கி விழுந்தார். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் கதவுகள் அடைக்கப்பட்டு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர். இரவு 7 மணிக்கு துவங்கிய சோதனை நேற்று அதிகாலை 4 மணி வரை நடந்தது.விடிய விடிய நடைபெற்ற சோதனையில் கணக்கில் வராத ₹55 ஆயிரம், நூற்றுக்கணக்கான படகுகள் மற்றும் டீசல் டோக்கன் குறித்த போலி ஆவணங்கள், ஆர்சி புக் உட்பட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
ராமேஸ்வரம் மீன்வளத் துறை அலுவலகத்தில் தொடர்ந்து பல்வேறு முறைகேடுகள், ஊழல்கள் நடந்து வருவதாக புகார்கள் வந்ததால் சோதனையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.