இதில் இன்ஸ்பெக்டர் சண்முகவடிவு அனைவரையும் வரவேற்றார். மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் குடிப்பதால் ஏற்படும் தீமைகள், போதை பொருட்களை தவறான பயன்பாட்டிற்கு பயன்படுத்துதலுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு, சுமார் 100க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ – மாணவிகள் பேரணியாக சென்று பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய இந்த பேரணி, காவலான் கேட், மேட்டு தெரு வழியாக பச்சையப்பன் பள்ளியில் முடிவடைந்தது. நிகழ்வின்போது, சவிதா மருந்தியல் கல்லூரி பேராசிரியர்கள் திருமலை குமரன், புண்ணியகோட்டி, சரண்யா, போலீசார் சங்கர், பாஸ்கர், சவிதா மருந்தியல் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட சுமார் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.