அரசு பள்ளியில் ஆண்டு விழா

வாலாஜாபாத்: தேவரியம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 23ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியர் எழில் தலைமை தாங்கினார். இதில், சிறப்பு விருந்தினராக ஊராட்சி மன்ற தலைவர் அஜய்குமார் கலந்துகொண்டு, முன்னதாக நடைபெற்ற பேச்சு போட்டி, ஓவிய போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ – மாணவிகளுக்கு சான்று மற்றும் நினைவு பரிசுகளை வழங்கினார். இதனைத்தொடர்ந்து, ஆண்டு விழாவில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்வில், ஊராட்சி மன்ற துணை தலைவர் கோவிந்தராஜ், வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்