நெல்லை மேயருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு அறிவிப்பு

சென்னை: நெல்லை மேயருக்கான தேர்தலில் திமுக வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் நாலை நடைபெற உள்ள நிலையில் ஆலோசனை கூட்டத்துக்கு பிறகு அமைச்சர்கள் கே.என்.நேரு, தங்கம் தென்னரசுஆகியோர் அறிவித்தனர்.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. நெல்லை மாநகராட்சியில் உள்ள 55 வார்டுகளில், 51 வார்டுகளில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. பின்னர் நெல்லை மாநகராட்சி மேயராக சரவணன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போதிலிருந்து இவர் மீது திமுக கவுன்சிலர்கள் பலர் தொடர் குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.

நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டும், மாமன்ற உருப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளாததால், தீர்மானம் கைவிடப்பட்டது. இதையடுத்து மேயராக இருந்த சரவணன் ராஜினாமா செய்தார்.இதையடுத்து, நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தல் நாளை நடைபெறும் நிலையில் திமுக மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்களுடன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.என்.நேரு உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர்.

நாளை காலை 10.30 மணிக்கு மேயர் தேர்தலுக்கான நடவடிக்கைகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இதுவரை அறிவிக்கப்படாமல் இருந்த்து.இந்நிலையில் நெல்லை மேயர் தேர்தலில் போட்டியிட பல மாமன்ற உறுப்பினர்களும் ஆர்வம் காட்டி வந்த நிலையில், மேயர் வேட்பாளராக ராமகிருஷ்ணன் என்கிற கிட்டு அறிவிக்கப்பட்டுள்ளார்.

 

Related posts

தகாத உறவுக்கு இடையூறாக இருந்ததால் காதலனுடன் சேர்ந்து கணவரை கத்தியால் குத்திக் கொன்ற மனைவி: தேனி அருகே பரபரப்பு

2025 டிசம்பருக்குள் அதிமுகவில் நிச்சயம் ஒற்றுமை வரும்: வைத்திலிங்கம் பேட்டி

மிஸ் & மிஸஸ் அழகிகள்… கலக்கும் அம்மா – மகள்!