சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மக்களவை தேர்தலில் தொகுதி பங்கீடு தொடர்பாக திமுக – காங்கிரஸ் இடையே பேச்சுவார்த்தை தொடங்கியது. டி.ஆர்.பாலு தலைமையிலான குழு, காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பேச்சுவார்த்தை குழுவில் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், அஜோய்குமார், செல்வப்பெருந்தகை இடம்பெற்றுள்ளனர்.