சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை எனக்கூறி அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு எதிராக ஓய்வு பெற்ற பேராசிரியர் தேவதாஸ் மனோகரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் பதிவாளர் ஜெ.பிரகாஷ்க்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, பதிவாளர் ஜெ.பிரகாஷ் நேரில் ஆஜரானார்.