சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் நிகழ்ச்சிக்கு வந்தால்தான் மாணவர்களுக்கு வருகைப்பதிவு என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நேதாஜியின் பிறந்தநாள் விழாவில் ஆளுநர் இன்று பங்கேற்கவுள்ள நிலையில் மாணவர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆளுநர் நிகழ்ச்சியில் பங்கேற்க 3 மற்றும் 4ஆம் ஆண்டு மாணவர்களுக்கு சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.