அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ்; ரூ.7.56 லட்சத்தில் குட்டைகுளம் தூர் வாரல்: 11 கிராம ஊராட்சியில் திட்ட பணிகள் தீவிரம்

வலங்கைமான்: அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் வலங்கைமான் அடுத்த ஆதிச்சமங்கலம் ஊராட்சியில் ரூ. 7.56 லட்சம் மதிப்பீட்டில் குளம் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 11 கிராம ஊராட்சியில் அரசு திட்டம் தீவிரமாக நடைபெற்று வருவதால், வலங்கைமான் ஒன்றிய விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வலங்கைமான் ஊரா ட்சி ஒன்றியத்தில் ஆலங்குடி, புளியகுடி, அன்னுக்குடி,வேலங்குடி நார்த்தாங்குடி உள்ளிட்ட 50 கிராம ஊராட்சிகள் உள்ளன. இவற்றில் குக் கிராமங்கள் அதிகமாக உள்ள மேல விடையல், மாணிக்கமங்கலம், அரவூர், மணலூர், மாளிகைதிடல் உத்தமதானபுரம், ஏரி வேலூர் மற்றும் 83 ரகுநாதபுரம் ஆகிய எட்டு கிராம ஊராட்சிகள் அடையாளம் காணப்பட்டு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 2021 -22ம் நிதியாண்டில் பணிகள் மேற்கொள்ளபட்டது. இவ் ஊராட்சிகளுக்கு அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியில் நீர்நிலைகளை புனரமைப்பதற்கு என 30 சதவீதமும், குக்கிராமங்களில் தெருக்கள் மற்றும் வீதிகளை அமைத்தல் மேம்படுத்த 25 சதவீதமும், சமத்துவ சுடுகாடு மற்றும் இடுகாடு என்று பரிந்துரைக்கப்பட்ட இடங்களில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்வதற்கான 10 சதவீதமும், பள்ளிகளில் உள்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் பொதுபயன்பாட்டு கட்டமைப்புகளை உருவாக்க 15 சதவீதமும் பசுமை மற்றும் சுத்தமான கிராமத்திற்கான ரூபாய் 10 சதவீதமும் வாழ்வாதாரம் மற்றும் சந்தைப்படுத்தல் வசதிகளைப் ஒருங்கிணைப்பதற்கு 10 சதவீதமும்நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல 2023, 24ம் நிதியாண்டில் சந்திரசேகரபுரம் கோவிந்தகுடி கீழ விடையல் கொட்டையூர் மதகரம், மணக்கால் பாடகச்சேரி பெருங்குடி சித்தன்வாலூர் தொழுவூர் விளத்தூர் உள்ளிட்ட 11 ஊராட்சிகளிலும் பணிகள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்றது .இந்நிலையில் கடந்த திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட அண்ணா மறுமலர்ச்சி திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக முடக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் தற்போது திமுக ஆட்சியில் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள 50 கிராம் ஊராட்சிகளில் 30 கிராம ஊராட்சிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. நடப்பு நிதியாண்டில் (24- 25 ) ஆதிச்சமங்கலம் ஆவூர் ஹரித்வாரமங்கலம், களத்தூர் ,கண்டியூர், மாத்தூர், நல்லூர், பாப்பாக்குடி பூனாயிருப்பு சாரநத்தம் தெற்கு பட்டம் உள்ளிட்ட 11 கிராம ஊராட்சிகளில் திட்டப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வலங்கைமான் அடுத்த ஆதிச்ச மங்கலம் ஊராட்சியில் ஊராட்சிக்கு சொந்தமான குட்டை குளம் ரூ.7.56 லட்சம் மதிப்பீட்டில் தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. வரும் 25- 26ம் நிதியாண்டில் ரெகுநாதபுரம் விருப்பாட்சிபுரம் உள்ளிட்ட 9 கிராம ஊராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அந்த பகுதியில் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Related posts

பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை உயிரிழப்பு!!

வீடு வாடகைக்கு கேட்பதுபோல் நடித்து தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற பெண் கைது!

வெள்ளம் வரும்போது பாலம் உடைந்தால் சிறைக்கு போக வேண்டி வரும் : அமைச்சர் துரைமுருகன்