சென்னை : அன்னபூர்ணா உரிமையாளரை அவமதித்தாரா நிர்மலா சீதாராமன் என்ற கேள்விக்கு பதில் அளித்த பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன்,”ஜி.எஸ்.டி. குறைகளை கேட்கவே நிர்மலா சீதாராமன் வந்திருந்தார். அன்னபூர்ணா உரிமையாளர் சீனிவாசன்தான் நிர்மலா சீதாராமனை சந்திக்க விரும்பினார். கேள்வியெழுப்பி சங்கடத்தை ஏற்படுத்தியதால் மன்னிப்பு கேட்க வந்தேன் என சீனிவாசன் தெரிவித்தார்.நான் சண்டை போட்டதாக அன்னபூர்ணா சீனிவாசன் பேசியதில் உண்மை இல்லை.,”இவ்வாறு தெரிவித்தார்.