திருவண்ணாமலையில் இன்று அண்ணாமலையார் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், வைகாசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை கணக்கிடும் பணி இன்று காலை தொடங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கையை மாதந்தோறும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணுவது வழக்கம். அதன்படி, வைகாசி மாதத்துக்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, அண்ணாமலையார் கோயில் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

கோயில் இணை ஆணையர் ஜோதி முன்னிலையில் நடந்த உண்டியல் இப்பணியில், நூற்றுக்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மற்றும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டனர். உண்டியல் காணிக்கை எண்ணும் பணி வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. மேலும் ஆன்லைன் மூலம் நேரடி ஒளிபரப்பும் செய்யப்பட்டது. இரவு 7 மணி வரை காணிக்கை எண்ணும் பணி நடைபெறும். பின்னர், பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை தொகை, கோயில் கணக்கில் வங்கியில் செலுத்தப்படும். அண்ணாமலையார் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே, ஒவ்வொரு மாதமும் உண்டியல் காணிக்கையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

காதலுக்கு ஊழியர் மறுப்பு; கடையில் பெட்ரோல் குண்டு வீச்சு: சிறுவன், 3 பேர் கைது

இரட்டை கொலை வழக்கு : 3 பேருக்கு இரட்டை ஆயுள்

‘அலைபாயுதே’ பாணியில் காதல் திருமணம் தாய் வீட்டு சிறையில் வைத்ததால் சுவர் ஏறிகுதித்து தப்பிய இளம்பெண்:காதலனுடன் காவல் நிலையத்தில் தஞ்சம்