பண்புடன் பேச பாரின்ல கத்துட்டு வாங்க அண்ணாமலை: செல்லூர் ராஜூ அட்வைஸ்

மதுரை: மதுரை அருகே ஊர்மெச்சிகுளத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘பாஜ மாநில தலைவர் அண்ணாமலை வெளிநாடு சென்று கல்வி கற்க உள்ளதற்கு என்னுடைய வாழ்த்துக்கள், அண்ணாமலை வெளிநாட்டில் நன்றாக கல்வி கற்று, தமிழகத்திற்கு வர வேண்டும். தலைவர்களைப் பற்றி எப்படி பண்புடன் பேச வேண்டும் என்பதை வெளிநாட்டில் கற்று வர வேண்டும்’’ என்றார். தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது டென்ஷனான செல்லூர் ராஜூ, ‘நாட்டில் எவ்வளவு பிரச்னைகள் உள்ளது. அதை பற்றி கேளுங்கள்‘ என்றார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு