குமரி : கன்னியாகுமரி அகஸ்த்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பாஜக தலைவர் அண்ணாமலை, “1991 டிச.11ல் இந்திய ஒற்றுமைக்காக கன்னியாகுமரியிலிருந்து பயணத்தை தொடங்கியவர் பிரதமர் மோடி. கன்னியாகுமரியின் மண்ணின் மைந்தனாக பிரதமர் மோடியை மக்கள் கொண்டாடுகின்றனர். 142 கோடி மக்களையும் வழிநடத்தக்கூடிய ஞானியாக, தலைவராக பிரதமர் மோடி உள்ளார்,”இவ்வாறு தெரிவித்தார்.