அண்ணாமலை வாழ்க்கை முழுவதும் நடந்தாலும் தமிழகத்தில் பாஜ காலூன்ற முடியாது: பாலகிருஷ்ணன் ‘சுளீர்’

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தேர்தல் நிதி அளிப்பு மற்றும் அரசியல் விளக்க பேரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், செய்தியாளர்களிடம் கூறியதாவது: நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் பாஜ தோல்வி அடைவது மட்டும் இல்லாமல், டெபாசிட்டையும் இழக்கும். பிரதமர் நரேந்திர மோடி எத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்தாலும், அண்ணாமலை வாழ்நாள் முழுவதும் நடைபயணம் மேற்கொண்டாலும், பாஜ தமிழ்நாட்டில் காலூன்ற முடியாது. தமிழ்நாட்டில் பாஜ வேரூன்றுவதற்காக, தாங்கள் ஏதோ ஆளுங்கட்சியை போன்று ஒரு தோற்றத்தை ஏற்படுத்தி, நாடகம் ஆடி கொண்டிருக்கிறார்கள். அண்ணாமலை சிறிதும் தன்னடக்கம் இல்லாமல் பேசி வருவதோடு, யாரை வேண்டுமானாலும் அநாகரிகமாக விமர்சிப்பவராக மாறியுள்ளார்.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!