முன்னதாக இந்த பாதயாத்திரை பிரச்சாரத்தில் திடீரென மோடியின் பொம்மையுடன் வாகனம் முன் சென்றது. இதற்கு காவல்துறையிடம் அனுமதி பெறப்படவில்லை என கூறப்படுகிறது. டி.எஸ்.பி.க்கள் தங்கராமன், உதயசூரியன் ஆகியோர் பிரசார பயணத்தில் பிரதமரின் பொம்மையுடன் வாகனம் செல்ல அனுமதி வாங்கவில்லை. எனவே வாகனம் செல்லக்கூடாது என்றனர். இதையடுத்து அங்கு திரண்ட பாரதிய ஜனதாவினர் காவல் துறையினரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.