சென்னை : கரையான் போல் அதிமுக கரைந்து கொண்டிருக்கிறது என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், “நம்பிக்கை துரோகி என்றால் அது எடப்பாடி பழனிசாமிதான். தன் கட்சியை காப்பாற்ற முடியாத எடப்பாடி பழனிசாமி எனக்கு அறிவுரை கூறத் தேவையில்லை. சிலர் சுயலாபத்துடன் செயல்படுவதால் அதிமுக அழிகிறது. தலைமை சரியில்லாததால்தான் அதிமுகவுக்கு மக்கள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.